சனி, 4 செப்டம்பர், 2010

ஸ்ரீ ஆபத்சகச்வரர் ஆலையம் ஆடுதுறை

ஸ்ரீ ஆபத்சகச்வரர் ஆலையம் ஆடுதுறை


[Gal1]
அகத்தியர்
அம்மன் பவளக்கொடி
பைரவர்
தட்சிணாமூர்த்தி
கோயில் உள்தோற்றம்
மூலவர் ஆபத்சகாயேஸ்வரர்
மூன்று விநாயகர்
முருகன்
 
சிவனை வணங்கும் சுக்ரீவன்
 
நன்றி:தினமலர்.com 

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர்



மூலவர்:  ஆபத்சகாயேஸ்வரர்
  உற்சவர்:  -
  அம்மன்/தாயார்:  பவளக்கொடியம்மை, பிரபாளவல்லி
  தல விருட்சம்:   பவள மல்லிகை 
  தீர்த்தம்:   சகாயதீர்த்தம், சூரிய தீர்த்தம் (கோயிலின் எதிரில் உள்ளது)
  ஆகமம்/பூஜை :   -
  பழமை :   1000-2000 வருடங்களுக்கு முன்  
  புராண பெயர் :  தென்குரங்காடுதுறை
  ஊர் :   ஆடுதுறை
  மாவட்டம் :  தஞ்சாவூர்
  மாநிலம் :  தமிழ்நாடு
 

பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தேவாரபதிகம்
பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும் முழவங்க குழல்மொந்தை முழங்கெரியாடும் அழகன் அயில் மூவிலை வேல் வலனேந்தும் குழகன் நகர்போல் குரங்காடு துறையே.
-திருஞானசம்பந்தர்
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 31வது தலம்.

 திருவிழா:
 
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.
 

 தல சிறப்பு:
 
இத்தலம் காவிரிதென்கரையில் இருப்தாலும், சுக்கிரீவன் வழிபட்ட தலமாதலாலும் தென்குரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சந்நிதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது பட்டுத் தழுவுகின்றது.
 

திறக்கும் நேரம்:


மேலமருத்துவக்குடி ஐராவதேஸ்வரர் அபிராமிநாயகி


இடைக்குளம் - (மேலமருத்துவக்குடி)




இறைவர் திருப்பெயர்  : ஐராவதேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்  : அபிராமிநாயகி. 
தல மரம்   :  வில்வ மரம் 
தீர்த்தம்    : சந்திர புஷ்கரணி. 
வழிபட்டோர்   : ஐராவதம். 
வைப்புத்தலப் பாடல்கள்  : அப்பர் - நள்ளாறும் பழையாறுங் (6-71-10). 

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் 'மேலமருத்துவக்குடி' என்று வழங்குகிறது.
  • ஐராவதம் வழிபட்ட தலம்; ஐராவதம் வழிபட்டு பேறு பெற்றதனால் இறைவனுக்கு ஐராவதேசுவரர் என்று பெயர்.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • பெரிய சிவாலயம்; பழைமையானது, கற்றளி.
  • நந்தி - நீர் கட்டும் அகழி அமைப்பில் உள்ளது.
  • பிராகாரத்தில் - வரிசையாக நான்கு சிவலிங்க மூர்த்தங்கள் உள்ளன.
  • மூலவர் - சதுர ஆவுடையார்; சற்று கூரான பாணம்.
  • கோயில் கல்வெட்டில் இறைவன் பெயர் "உய்யக் கொண்டார் வளநாட்டு திரைமூர்நாட்டு....... திருஇடைக்குளமுடையார்" என்றுள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறையிலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் ஆடுதுறை வந்து - அங்கிருந்து ரயில்வே ரோடில் வந்து மேலமருத்துவக்குடியை அடையலாம். 1கி.மீ. தொலைவு.



6.71 திருஅடைவு - திருத்தாண்டகம்

















(ஆறாம் திருமுறை)

6.71 திருஅடைவு - திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

712 பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து
புலந்தழிய சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்
கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்
கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி
செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்
பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்
பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே.
6.71.1
713 காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்
கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை
மேவியவீ ரட்டானம் வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாங்
கோவல்நகர் வீரட்டங் குறுக்கை வீரட்டங்
கோத்திட்டைக் குடிவீரட் டானமிவை கூறி
நாவினவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன்றமருஞ் சிவன்றமரென் றகல்வர் நன்கே.
6.71.2
714 நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்
குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான் குடி
கற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடி
கருந்திட்டைக் குடிகடையக் குடிகா ணுங்கால்
விற்குடிவேள் விக்குடிநல் வேட்டக் குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்றவிடர் போகு மன்றே.
6.71.3
715 பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர்
பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்
நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத் தூரும்
அளப்பூரோ மாம்புலியூர் ஒற்றி யூருந்
துறையூருந் துவையூருந் தோழுர் தானுந்
துடையூருந் தொழவிடர்கள் தொடரா வன்றே.
6.71.4
716 பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே.
6.71.5
717 மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்
மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு
தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்
சாய்க்காடு தெள்ளுபுனற் கொள்ளிக் காடு
பலர்பாடும் பழையனூர் ஆலங் காடு
பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க
விலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை
வெண்காடும் அடையவினை வேறா மன்றே.
6.71.6
718 கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்
கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல் வாயில்
நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்
நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்
மடுவார்தென் மதுரைநகர் ஆல வாயில்
மறிகடல்சூழ் புனவாயில் மாடம் நீடு
குடவாயில் குணவாயி லான வெல்லாம்
புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே.
6.71.7
719 நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்
சுரநாகேச் சுரநாகளேச் சுரநன் கான
கோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சுரங்
குக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால்
ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுரம்
அத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்
ஈடுதிரை இராமேச்சுர மென்றென் றேத்தி
இறைவனுறை சுரம்பலவும் இயம்பு வோமே.
6.71.8
720 கந்தமா தனங்கயிலை மலை கேதாரங்
காளத்தி கழுக்குன்றங் கண்ணார் அண்ணா
மந்தமாம் பொழிற்சாரல் வடபர்ப் பதம்
மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம்
விந்தமா மலைவேதஞ் சைய மிக்க
வியன் பொதியின் மலைமேரு வுதய மத்தம்
இந்துசே கரனுறையும் மலைகள் மற்றும்
ஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே.
6.71.9
721 நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு
நலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந்
தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்கு ளமுநல்
இடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்
விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா
கோலக்கா ஆனைக்கா வியன்கோ டிகா
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்
குளங்களங்கா எனவனைத்துங் கூறு வோமே.
6.71.10
722 கயிலாயமலை யெடுத்தான் கரங்க ளோடு
சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை
பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்
குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை
பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு
மயிலாடு துறைகடம்பந் துறையா வடு
துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே.
6.71.11

திருச்சிற்றம்பலம்


















HAPPY BIRTHDAY

1.gif069.gif1243.gif15.gif16.gif17.gif18.gif20.gif25.gif4eer.gif567.gif5a.gif23.gif19.gif2.gif
அருள்மிகு ஸ்ரீ மாகலிங்கசுவாமி திருக்கோயில் திருவிடைமருதூர் தஞ்சை மாவட்டம்

வியாழன், 2 செப்டம்பர், 2010

ஸ்ரீ வாராஹி சக்தி பீடம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருநடன உற்சவம்

ஸ்ரீ வாராஹி சக்தி பீடம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருநடன உற்சவம் மேலமருத்துவக்குடி

ஸ்ரீ வாராஹி சக்தி பீடம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருநடனம்

ஸ்ரீ வாராஹி சக்தி பீடம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருநடனம் மேலமருத்துவக்குடி

புதன், 1 செப்டம்பர், 2010

ஸ்ரீ வாராஹி சக்தி பீடம் ஸ்ரீ காளியம்மன் திருநடன உற்சவம்

ஸ்ரீ வாராஹி சக்தி பீடம் ஸ்ரீ காளியம்மன் திருநடன உற்சவம் மேலமருத்துவக்குடி http://balu-bharath.blogspot.com

ஸ்ரீ வாராஹி சக்தி பீடம் மேலமருத்துவக்குடி

ஸ்ரீ வாராஹி சக்தி பீடம் 11  ம ஆண்டு   சித்திரை பௌர்ணமி பெருவிழா இடம் ஸ்ரீ வாராஹி சக்திபீடம் கீழத்தெரு மேலமருத்துவக்குடி ஆடுதுறை போஸ்ட் திருவிடைமருதூர் தாலுக்கா தஞ்சை மாவட்டம் pin : 612101

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

ஸ்ரீ ஐராவதேஸ்வரர் திருக்கோயில்

மேலமருத்துவக்குடி ஸ்ரீ ஐராவதேஸ்வரர்  
தலமும் இருப்பிடமும் 
ஆடுதுறைக்கு தெற்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது 
தலப்பெயர்கள் இடைகுளம்
மூர்த்திகல்:
இறைவன்:ஸ்ரீ ஐராவதேஸ்வரர் 
இறைவி:ஸ்ரீ அபிராமியம்மன் 
தீர்த்தங்கள்:சந்திரபுஷ்கரினி
தலப்பெருமை:
ஐராவதம் இத்தல இறைவனை வணங்கி பேறு பெற்றதால் இறைவனுக்கு 
ஐராவதேஸ்வரர் என்று பெயர்.சந்திரன் இத்தலத்திற்கு வந்து சாபவிமோசனம் 
பெற்றதால் இத்தல தீர்த்தம் சந்திரதீர்த்தம் என்று பெயர் 
ஸ்ரீ கிருஷ்ணர் வழிபட்டு ருக்மணி தேவியை அடைந்ததும்.ஸ்ரீ ஆதிஷேசன் 
வழிபட்டு பூமி தேவியைத் தாங்கும் வலிமையையும் பெற்ற  தளம்.
தேவார பாடல்:
திரு நாவுக்கரசர் அருளிய திருத்தாண்டகத்தில் போற்றப்பட்டுள்ளது 
தலச்சிறப்பு:
அகத்திய முனிவர் வழிப்பட்டதலம்.இததலத்தில் முருகன் மீது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பெற்றது 
  இருப்பிடம்:
மேலமருத்துவக்குடி ஆடுதுறை வழி திருவிடைமருதூர் தாலுக்கா தஞ்சை மாவட்டம் 

முருகன் குருசாமி மேலமருத்துவக்குடி

இது எனது வீட்டு பூசை அரை

முருகன் குருசாமி மேலமருத்துவக்குடி

முருகன் குருசாமி மேலமருத்துவக்குடி

முருகன் குருசாமி மேலமருத்துவக்குடி

முருகன் குருசாமி மேலமருத்துவக்குடி

BHARATHI BALU

SRI RAJAKAALIAMMAN MELAMARUTHUVAKUDI ADUTHURAI

MELA MARUTHUVAKUDI

MELA MARUTHUVAKUDI

பழனியப்பா

தங்கத்தாமரை தொட்டியலிலே

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன்

Isai Tamizh Nee Seida

அழகென்ற சொல்லுக்கு முருகா

Paattum Naane Bhavamum Naane